போபால்:
காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங், மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துபாஜக வேட்பாளராக, பெண் சாமியாரும், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருப்பவருமான பிரக்யா சிங் தாக்குர் களமிறக்கப்பட்டார்.
இந்நிலையில், போபாலைச் சேர்ந்த சாமியார்கள், திக்விஜய் சிங்கிற்கே தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். “காவி அணிந்திருப்பதால் பிரக்யா சிங் துறவியாகிவிட முடியாது” என்றும், “மதத்தின் பெயரால் பாஜக மக்களைஏமாற்றுகிறது” என்றும் குற்றச்சாட்டுக் களை வைத்தனர். பிரக்யாவை தோற்கடித்தே தீருவோம் என்று யாகம் நடத்திய அவர்கள், ‘கம்ப்யூட்டர்’ பாபா தலை
மையில் பேரணியும் நடத்தினர்.
இவர்களில், ‘மிர்ச்சி பாபா’ என்று அழைக்கப்படும் மகாமண்டலேஸ்வரர் சுவாமி பைரக்யானந்த கிரி என்ற சாமியாரும் ஒருவராவார். போபால் தொகுதியில் திக்விஜய் சிங் வெற்றி பெறாமல் போனால், நான் ஜீவசமாதியாகி வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்று பகிரங்கமாக அறிவித்தார்.ஆனால், தேர்தல் முடிவுகளோ பைரக்யானந்த கிரிக்கு எதிராகவே அமைந்தது. இதனால், திடீரென அவர் மாயமானார். சொன்னபடியே, பைரக் யானந்த கிரி, ஜீவசமாதி அடைந்து விட்டாரோ? என்று போபாலில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சில நாட்கள் கழித்து வெளிப்பட்ட அவர், தலைமறை வாகவில்லை என்றும் ஆனால், ஜீவசமாதி அடையப் போவது உறுதி என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, போபால் மாவட்ட ஆட்சியருக்கு தனது வழக்கறிஞர் மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பிய பைரக்யானந்த கிரி, ஜூன் 16 பிற்பகல் 2.11 மணிக்கு நான் ஜீவசமாதி நிலையை அடைய தீர்மானித்திருக்கிறேன்; இதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதிர்ச்சி அளித்தார். அதன்படியே, அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு ஞாயிறன்று காலை போபால் நகருக்குத் திரும்பினார். ஆனால், போபால் மாவட்ட ஆட்சியர் தருண் குமார் பித்தோட் உத்தரவின்படி, மிர்ச்சி பாபா இருந்த ஹோட் டலை முற்றுகையிட்ட போலீசார் அவரை வெளியே செல்ல விடாமல் தடுத்து, தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.